என்ன செய்தாலும், ஹோட்டல் சாம்பார் சுவையும் மணமும் வீட்டில் செய்யும் சாம்பாரில்வரவில்லையே என்று சொல்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்காகவே செய்தது தான் இந்த வீடியோ......
சில நேரங்களில் , அதுவும் ஜலதோஷம் வந்து பாடாய் படுத்தும் நேரத்தில், சூடாக சுக்கு டீ குடித்தால் எத்தனை ஆனந்தமாக இருக்கும். ! அதிலும் கருப்பட்டி வேறு கலந்து விட்டால் ஆனந்தம் ஆனந்தமே !
அப்படிப்பட்ட ஒரு டீ தான் இந்த வீடியோவில்
செய்முறையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.....
நன்றி.
கல் சட்டி நாம் மறந்து விட்ட பாத்திரங்களில் ஒன்று. இப்பொழுது மீண்டும், அங்கங்கே கடைகளில் தலைக் காட்டுகிறது. அதில் வத்தக் குழம்பு வைத்திருக்கிறேன் பாருங்கள்......
இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் போரடித்து விட்டதா?
குடும்பத்தினர் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா? இந்த கார சார சட்னி செய்து பாருங்கள்.... உன்னைப் போல் உண்டா என்கிற புகழ்ச்சிக்கடலில் உங்களைத் தள்ளி திக்கு முக்காட செய்து விடுவார்கள் பாருங்களேன்.....
Flax seeds என்று அழைகப்படும் ஆளி விதை உடலிற்கு ஆரோக்கியப் பலன்கள்
நிறைந்தது என்று பரவலாக பேசப்படுகிறது. Omega3 fatty acids மற்றும்
நார்சத்து நிறைந்து காணப்படும் இதை உபயோகித்து நாம் இட்லிக்குத் தொட்டுக்
கொள்ளும் மிளகாய் பொடி செய்யும் முறை பார்ப்போம்.
ஓட்ஸின் பயன்கள் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஓட்ஸைக் கொண்டு ,,
உப்புமா, கிச்சடி, கஞ்சி எல்லாமே செய்து பார்த்திருக்கிறேன். அடை செய்யும்
போது கூட ஓட்ஸ் சேர்த்திருக்கிறேன்.
இன்று ஓட்சை வைத்து ரவா லட்டு மாதிரி , செய்து பார்த்ததில் மிக அருமையான
லட்டுகள் , பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் கிடைத்தன. மிக மிக எளிதான இந்த
லட்டு செய்து சுவைத்து தான் பாருங்களேன்.
தக்காளி தொக்கு செய்முறை வீடியோ இணைத்திருக்கிறேன்.விரைவாகவும் செய்து விடலாம். சுவையோ அபாரமாய் இருக்கும். செய்து பார்த்து, உங்களின் மேலானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,,,,,,,
கொத்தமல்லி சாதம் சுவையானது மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் ஏற்றது. கொத்தமல்லி சாதத்திலேயே காய்கறிகளும் சேர்த்து செய்தால், எல்லோருக்குமே மதிய உணவாக கொடுத்து விடலாமே. அதுவும் பள்ளிக் குழந்தைகளின்' லஞ்ச்பாக்ஸ் ' ற்கு மிகவும் ஏற்றது.
எப்படி செய்யலாம் என்று இந்த வீடியோ சொல்கிறது......
இப்பொழுது எங்கெங்கு நோக்கினும் சர்க்கரை நோய் தான். யாரைக் கேட்டாலும், காபியில் சர்க்கரை வேண்டாம்.......... ப்ளீஸ் ....என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லாமே நம் பாரம்பர்ய உணவு முறைகளை விட்டு விட்டு வெகு தூரம் வந்ததன் விளைவு.
இப்ப புலம்பி என்ன ஆகப்போகிறது? என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது. வந்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு மருந்து வேண்டுமே என்று தவிக்கிறோம். சர்க்கரையைக் கட்டுப் படுத்துவதற்கு மிக எளிய மருந்து நம் அஞ்சறைப் பெட்டியில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது.
அது என்ன? எப்படி செய்யலாம் என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்......
மட்டர் பனீர் செய்முறை வீடியோ
வட இந்திய.உணவை சற்றே திசை திருப்பி தென்னிந்திய ஸ்டைலில் செய்திருக்கிறேன். செய்து பார்த்து உங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
இணைய தளம் ஒன்றில், இந்த சாம்பார் செய்முறை படித்தேன் .செய்தும் பார்த்தேன். அற்புதமான ருசியில் இருந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
சுவையான சாம்பார்(சரவண பவன்) செய்வது எளிது . எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபனிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள்.அபார ருசி. இந்த ருசியில் டிபன் , டேபிளில் இருந்த இடம் தெரியாமல் காலியாகும். நன்றி ! நன்றி!
சில சமயம், விருந்தாளிகள் சாப்பிட வரும் போது, காலி ஊறுகாய் பாட்டில் நம்மைப் பார்த்து நக்கலாய் சிரிக்கும். உடனே ஊறுகாய் வாங்கி வர உங்களவரும் முகத்தை சுளிக்கலாம். " இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்யேன் " போன்ற அறிவுரைகள் பறந்து வரலாம்.
ஆனால் மாங்காய் கைவசம் இருந்தால் சட்டென்று ஐந்து நிமிடத்தில், நாக்கில் நீர் வரவழைக்கும் ஊறுகாய் செய்து விடலாம்.
எப்படி என்று கேட்பவர்கள் கீழிருக்கும் வீடியோவைப் பாருங்களேன்.:
பீன்சில் கறி ட்டுமே செய்து பழகியிருந்த எனக்கு அதில் உசிலி என்பது சற்று புதிது. நண்பர் வீட்டில் சாப்பிட்ட போது என்னவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட, அங்கேயே, அப்பொழுதே செய்யக் கற்றுக் கொண்டேன்.
அட....... இத்தனை வயதாகியும் இப்ப தான் பருப்புசிலி கற்றுக் கொள்கிறாயா? என்று கேட்காதீர்கள். நான் மேலே சொன்ன நிகழ்வு நடந்தது கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக.
இப்பொழுது மிக அருமையாக செய்கிறேன் .
சந்தேகமிருந்தால் இந்த வீடியோவைப் பாருங்கள் .....நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.
மாங்காய் சீசனில் மாங்காய் தொக்குப் போடாமல் இருந்தால் எப்படி?
அதனால் மாங்காய் தொக்குப் போட்டதோடு நிற்காமல் அதைப் படமும் எடுத்து விட்டேன்.
இந்தப் படத்தைப் பார்ப்பதோடு நிற்காமல், அதை உங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதை மிகப்பெரிய வெற்றிப் படமாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது. செய்வீர்கள் என்றும் நம்புகிறேன். நன்றி.
டயாபிடீஸ் விஸ்வருபம் எடுத்திருக்கும், இந்நேரத்தில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை வேம்பு. நாம் அதை சரியாக உபயோகித்தால், சர்க்கரை நோயை, ஓட, ஓட விரட்டி விடலாம்.
வேம்பின் எல்லா பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை தான்.
நான் இங்கே, வேப்பம்பூ சேர்த்து செய்யும் ரசம் பற்றி இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.
Please 'Like', 'Share', 'Subscribe'& comment to my videos. Thankyou!
தினமும் ," இன்னைக்கும் தோசைக்கு சட்னியா ?" என்று உங்கள் குடும்பத்தினர் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா?
பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, கேட்டு, உங்கள் வீட்டு வாண்டுகளும், " எனக்கு சட்னி வேண்டாம்." என்று முறைக்கிறார்களா?
இதோ இந்த வீடியோவில் இருக்கிறது தீர்வு. சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால், சரி செய்வதெப்படி என்கிற 'டிப்ஸ்' கூட வீடியோவில் அடங்கியிருக்கிறது.
இதை நீங்கள் மட்டும் பார்க்காமல், நண்பர்களுடன் 'Share' செய்து கொள்ளுங்கள். 'Like' & Subscribe' பட்டன்களைத் தட்டி விடுங்கள்.
வீடியோவின் கீழே இருக்கும் 'comment' பெட்டியில் உங்கள் கருத்து, சந்தேகம், எதை வேண்டுமானாலும் நான் செய்திருக்கும் தவறுகள் உட்பட..... பகிர்ந்து கொள்ளுங்கள்.
குக்கர் அடுப்பில் சீறி க் கொண்டிருக்க, உங்கள் கையில் வெங்காயம் வெட்டுப்பட, கண்களிலோ கண்ணீர் ( வெங்காயத்தால்).
அப்போது உங்களவர் ," என் போனைப் பார்த்தாயா ?" கேட்க,
உங்கள் மகனோ , மகளோ, " அம்மா என் யூனிபார்ம் காணோம்." என்று அபயக் குரல் கொடுக்க .... எல்லாவற்றையும் சரி செய்து விட்டு,
" இதோ புளியைக் கரைத்து சாம்பார் செய்து விட்டால் ஆச்சு என்று சமையலறைக்குள் நுழைந்து ,"புளியை ஊற வைத்த கிண்ணம் எங்கே என்று தேடிய பின் தான் உங்கள் நினைவிற்கு வருகிறது ," இன்னும் புளியை நனைத்தே வைக்க வில்லையா?".
"இன்றைக்கு நேரத்திற்கு எல்லாம் முடித்தாற் போல் தான்." அங்கலாய்த்துக் கொண்டு , புளியுடன் யுத்தத்தை ஆரம்பிக்கப் போகிறீர்களா?
அப்படிப்பட்ட யுத்தம் தவிர்க்கும் முயற்சி தான் இந்த வீடியோ :
யுத்தம் தவிர்க்கும் டிப்ஸ் வீடியோவை, 'Like', 'Share' & 'Subscribe' செய்து விடுங்களேன்.
கொழுப்பே கெட்டது தான். இதில் நல்லது, கெட்டது என்று ......என்ன சொல்ல வருகிறாய் ? என்று சிலர் யோசிப்பது கேட்கிறது..
உடல் நலத்திற்கு, முக்கியமாய் இதயத்திற்குத் தீங்கு செய்யும் ' LDL' கொழுப்பு மருந்தில்லாமல் கரைய இந்தப் பொடி உதவும். வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய பொடி. . நம் பாரம்பர்ய உணவு . .சுவைக்கு நான் கியாரண்டி.
எல்லா வயதினரும், உண்ணலாம்.
எப்படி செய்யலாம் என்பதை இணைப்பில் இருக்கும் வீடியோவில் விளக்கியிருக்கிறேன். பாருங்களேன்....
எப்பொழுதும் போல் இந்த வீடியோவிற்கும், 'Like', 'Share' & 'Subscribe' செய்து விடுங்கள். உங்களுக்கு நன்றியுடையவளாய் இருப்பேன். நன்றி.
இட்லி தோசையா? எங்களுக்கு சாம்பார், சட்னி தான் வேண்டும் என்று சொல்லும் ரசிகர்கள் இருக்கிறார்கள். வேறு சிலர் சாம்பாரோ, சட்னியோ, அதனுடன் எங்களுக்கு நல்லெண்ணெயில் குழைத்த மிளகாய்ப் பொடி அவசியம் வேண்டும் என்று சொல்லும் மிளகாய்ப் பொடி ரசிகர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இல்லத்தரசிகளுக்கோ இட்லி மிளகாய்ப் பொடி வiரப் பிரசாதம் என்று சொல்லலாம். சட்னி, சாம்பார் செய்ய முடியவில்லையா ? மிளகாய்ப் பொடி கைவசம் இருந்தால் கவலையே வேண்டாம்.
ஆனால், மிளகாய்ப் பொடி செய்முறையில் சில நுணுக்கங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
அதனால், இட்லி மிளகாய்ப் பொடி செய்யும் போது படம் பிடித்து விட்டேன். படம் எப்படி இருக்கிறது என்று பார்த்து உங்கள் மேலானக் கருத்துகளை சொல்லுங்களேன்.
உங்கள் நண்பர்களிடம் இந்த You Tube வீடியோவை 'Share' செய்து விடுங்கள். வீடியோவிற்குக் கீழே உள்ள 'Like' மற்றும் 'Subscribe' பட்டன்களை ஓங்கி ஒரு அடி அடித்து விட்டு, நகருங்கள்.
மாங்காய் சீசன் என்பதால்மாங்காய் பொரிச்ச குழம்பு, மதிய உணவில்.. புளிப்பும் உரைப்புமாக சுவையான குழம்பு என்று என் மருமகள் எனக்குப் புகழாரம்.
மாங்காயில் பச்சடி செய்வோம், மாங்காய் ஊறுகாய் தெரியும், ஏன் மாங்காயில் சாம்பார் கூட கேள்வி பட்டிருக்கிறோம். இதென்ன மாங்காய் பொரிச்ச குழம்பு என்று கேட்பவர்கள் கீழே இருக்கும் செய் முறை வீடியோவைப் பாருங்கள் . நீங்களும் செய்து பார்த்து சுவை எப்படியிருந்தது என்று எனக்கு சொல்ல மறக்காதீர்கள். சரியா?
"எங்களுக்குத் தெரியாதையா நீ செய்திருக்கப் போகிறாய் ?" என்கிற சமையலுலக ஜாம்பவான்கள் என் செய் முறை சரி தானா என்று பார்த்து திருத்தங்கள் இருந்தால் சொல்லுங்களேன்.
ஆனால் வீடியோவை 'like', 'share' & 'subscribe' செய்ய மறக்காதீர்கள் சரியா?
இட்லியும், சாம்பாரும் பற்றிய பதிவு என்று நீங்கள் நினைத்து விடப் போகிறீர்கள். இது இட்லிக்கான சாம்பார். இதில் துவரம் பருப்பு சேர்ப்பதில்லை. துவரம் பருப்பு சேர்க்காமல் சாம்பாரா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
செய்முறையை இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.
ஒரு எச்சரிக்கை: செய்முறைப் பார்த்து சாம்பார் செய்தீர்களானால் கணக்கில்லாமல் மலை மலையாய் இட்லி செய்ய வேண்டி நேரலாம். சாம்பாரின் சுவை, இட்லிகளை நிமிட நேரத்தில் காலியாக்கி விடும், அபாயம் உண்டு. அதற்காகத் தான் இந்த எச்சரிக்கை.
இதோ வீடியோ:
வீடியோ பார்த்த பின்பு 'Like', 'Share' & 'Subscribe' செய்ய மறக்க வேண்டாமே! ப்ளீஸ்.......
அவளுக்கு ஜில்லென்று எலுமிச்சை ஜூஸ் கொடுத்து விட்டு பேச உட்கார்ந்ததில் நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.
இவளுக்கு சாப்பிட ஒன்றும் கொடுக்கவில்லையே என்று நினைவு வர.........அவளுக்குத் தோசை வார்த்துக் கொடுத்தேன். அதற்கு ஜோடியாக கொத்தமல்லி சட்னி வைத்து சாப்பிட சொன்னேன்.
அன்று மார்கெட்டிற்கு சென்றிருந்த போது ,வாழைப்பூ கண்ணில் பட சட்டென்று ஒன்று வாங்கி வந்து விட்டேன். அதை ஆய்ந்து கள்ளன் எடுத்து, நறுக்கி.....சலித்துப் போய்விட்டது.
குடும்பத்தாரின் உடல் நலத்தை முன்னிட்டு, வாழைப்பூவை சரி செய்து, மறு நாள் உசிலியாக செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தேன் . ஆனால் வீட்டில் எல்லோரும் வாழைப்பூ வடை செய்தால் தான் ஆயிற்று என்று சொல்லவே , உசிலி என்று முடிவு செய்திருந்ததை மாற்றி வடையாக செய்து விட்டேன்.
வாழைப்பூ வடை செய்முறை வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு:
உங்களின் மேலானக் கருத்துகளை வீடியோவிற்குக் கீழே இருக்கும் கருத்துப் பெட்டிக்குள் இட்டால் கூடுதல் மகிழ்ச்சி.
நன்றி!நன்றி!
நான் 'Rajisivams kitchen' You Tube Channel ஆரம்பித்ததிலிருந்து , சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ, சமையலறையில் கேமிரா சரியாக செட் ஆகியிருக்கிறதா என்பதில் அதிக அக்கறை எனக்கு என்று வீட்டில் எல்லோரும் சொல்கிறார்கள்.
அவர்கள் சொல்வதை உண்மையாக்கி விட்டேன். தேங்காய் சட்னியையும் விடவில்லை . படமெடுத்தாச்சு. பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லி விடுங்கள். வீடியோப் பார்த்த பின் மறக்காமல் ஷேர் செய்து விடுங்கள்.
அப்படி ஷேர் செய்ய மறந்து விட்டால் நாளை நீங்கள் சாப்பிடும் சட்னியில் உப்பு அதிகமாகி விடும், சாத்தியக் கூறுகள் அதிகமாகும் அபாயம் உள்ளது.t
ஷேர் செய்து வரும் நண்பரகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
இதோ தேங்காய் சட்னி வீடியோ :
'Like', 'Share' & 'Subscribe' செய்யும் நண்பர்களுக்கு மீண்டும் எனது நன்றிகள் பல.
உலகம் சுற்றும் வாலிபனான என் மகன் எப்பொழுது தரையிறங்கினாலும், அவன் விருபப்பட்டுக் கேட்பது பருப்புத் துவையலும், வத்தக் குழம்பும் தான்.
'' உலகில் பல இடங்களில் சாப்பிட்டிருக்கிறேன்.என்ன தான் வெண்ணெயும், க்ரீமுமே கொட்டி கொட்டி செய்தாலும், அவையெல்லாம் நம் பருப்புதுவையலிற்கும், வத்தக் குழம்பிற்கும் ஈடாகுமா ?" என்று அங்கலாய்ப்பான்.
உங்களுக்கும் 'பருப்புத்துவையல்,வத்தக்குழம்பு 'ஜோடியைப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.
தமிழ் புத்தாண்டு அன்று எத்தனை இனிப்பு வகை செய்தாலும், மாங்காய் பச்சடி இல்லாமல் புத்தாண்டா? நான் மட்டும் செய்யாமல் விடுவேனா என்ன? செய்தேன் மிக அருமையாக வந்திருந்தது.
அருமையாய் அமைந்ததை வீடியோ எடுத்துப் பதிவிட்டுக் கொண்டால் என்றாவது உபயோகமாக இருக்குமே என்று படம் பிடித்துக் கொண்டேன்.
பச்சடி சுவைத்த பின் என்னவர் கேட்டார்," எல்லாம் சரி. முக்கியமான ஒன்றை அதில் சேர்க்க மறந்து விட்டாயே " என்று.
அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. ஆமாம்.......ஸ்........மறந்து விட்டேன். ஆனால் அது போடாமல் இருந்ததாலும் சுவையில் எந்த மாற்றமும் இல்லை. என்னவென்று யோசிக்கிறீர்களா?
பாருங்கள் உங்களுக்கேப் புரியும் :-
உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்ய மறக்க வேண்டாமே! நன்றி ! நன்றி!
'வத்தக் குழம்பு' என்பதை விடவும் 'வற்றல் குழம்பு' என்பதே சரி என்றே நினைக்கிறேன் . வத்தக் குழம்பு என்று சொன்னால் எளிதாக எல்லோருக்கும் விளங்கும் என்பதால் அதையே தலைப்பாக்கி விட்டேன்.
வத்தக் குழம்பு செய்யத் தேவையானவை :
புளி ஒரு சின்ன உருண்டை. ( கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்.
சாம்பார் பொடி - 2-3 ஸ்பூன்.
முருங்கைக்காய் நறுக்கியது .
உப்பு - தேவைக்கேற்ப
இன்னும் என்னென்ன தேவை, எப்படி செய்வது என்று நான் சொல்வதை விடவும் ,செய்முறையை வீடியோவில் பார்த்தால் சட்டென்று புரிந்து விடும் என்பதால்
இதோ வீடியோ:
வீடியோவை உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் 'ஷேர்' செய்ய மறக்க வேண்டாம். ' ஷேரிங் ' பற்றி (ஓய்வு பெற்ற ) ஆசிரியையான நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்களாம்.