Tuesday, September 30, 2014

பிடிகருணைக் கிழங்கு மசியல்

பிடி கருணைக் கிழங்கு மசியல்  சாப்பிட சுவையாக இருக்கும். பிடி கருணைக்  கிழங்கு  , புது கிழங்காக இருந்தால் சில சமயம் , சமைக்கும் போதும்,சாப்பிடும் போதும், கையும் , வாயும் அரிக்கும். அதைத் தவிர்க்க  வாங்கி நான்கைந்து நாட்களுக்குப் பிறகே சமைக்க வேண்டும்.

கருணைக் கிழங்கு மசியல் செய்யத் தேவையானவை:




  1. கருணைக் கிழங்கு--2 அல்லது 3.
  2. பச்சை மிளகாய்----2 அல்லது 3 ( உங்கள் கார விருப்பத்திற்கேற்ப)
  3. எலுமிச்சம் பழம் --1.
  4. உப்பு---தேவைக்கேற்ப.
  5. சர்க்கரை ---1/2 ஸ்புன்
  6. தேங்காய் துருவல் விருப்பப்பட்டால்
  7. கறிவேப்பிலை சிறிது.
  8. கடுகு தாளிக்க .
  9. எண்ணெய் -தாளிக்க 1 ஸ்புன்

செய்முறை :

பச்சை மிளகாயை  தூளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிடி கருணைக் கிழங்கை   குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று  விசில் வந்தால் போதும் . குக்கர் சத்தம் அடங்கிய பின் எடுத்துத் தோலை உரித்து  லேசாக மசித்துக் கொள்ளவும்.( ரொம்பவும் மசிக்க வேண்டாம்) .

அடுப்பில் வாணலியை வைத்து , எண்ணெய்  ஊற்றி சூடானதும், கடுகு போட்டுத் தாளிக்கவும்.. கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய், கறிவேப்பிலைத் தாளித்து, பின்பு  மசித்து வைத்தக் கிழங்கை போட்டு தேவைக்கேற்ப உப்புத் தூளைத்  தூவவும். சிறிது நேரம் பிரட்டிக் கொண்டிருக்கவும். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள்  வதக்கினால் போதும். இறக்குவதற்கு முன்பு சர்க்கரைத் தூவி  சில வினாடிகள்  பிரட்டவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

இறக்கிய பின்பு. பாதி எலுமிச்சம்பழத்தைப் பிழியவும்.கரண்டியால் கலக்கவும்.ருசி பார்க்கவும். தேவைப்பட்டால்  மறு பாதி எலுமிச்சம் பழத்தையும் பிழியலாம். விருப்பப்பட்டால் தேங்காய துருவல் சேர்க்கலாம்.




மிக ருசியாக இருக்கும்.