சர்வதேச உணவுகள் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் இந்திய உணவுகளைப் பற்றிய விவாதத்தில் மஞ்சள் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
மஞ்சளின் மகத்துவம் பற்றி மேலை நாட்டவரும் அறிந்திருக்கிரார்கள்.
நம் முன்னோர்கள் மஞ்சளின் மகத்துவம் உணர்ந்து அடுத்தடுத்த தலை முறைக்கு சொல்லிக் கொடுத்து சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் தான் சிலவற்றை பத்தாம்பசலித்தனம் என்று ஒதுக்கித் தள்ளியிருக்கிறோம்.நல்ல வேளையாக நாம் சாம்பாருக்கும், ரசத்திற்கும் இன்னும் மஞ்சள் போட்டுக் கொண்டு தானிருக்கிறோம்.
இந்த மகிமை வாய்ந்த மஞ்சளும் , பாலும் கலந்தால் என்னென்ன நமைகள் கிடைக்கும் பார்க்கலாம்.முதலில் மஞ்சள் பால் எப்படி தயாரிப்பது என்று முதலில் பார்ப்போமா?
விரலிமஞ்சள் அல்லது கொம்பு மஞ்சள் ஒன்று அல்லது இரண்டு . சுத்தியலினால் நன்றாக உடைத்துக் கொள்ளுங்கள்.(நைசாக மிகிஸ்யில் போட்டு அரைக்க வேண்டாம்)
" கேசில் " ஒரு பெரிய டம்ளர் அளவு பாலை வைத்து அதில் இந்த உடைத்த மஞ்சளைப் போட்டு பொங்கப்பொங்கக் காய்ச்சவும். பின் டீ ஃபில்டரில் வடிகட்டி சர்க்கரைப் போட்டோ ., போடாமலோ ஆற்றிக் குடிக்கலாம். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இந்தப் பாலைக் குடித்தால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
என்னென்ன நன்மைகள்? கொஞ்சம் சொல்லி விட்டுப் போயேன் என்று கேட்பவர்களுக்காக .......
1. மஞ்சள் பால் உடலை உஷ்ணப்படுத்தும் குணமிருப்பதால் , நெஞ்சில் சளி,கபம்., சைனஸ் தொல்லை , ஆஸ்துமா ஆகியவற்றுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும்.
2. மஞ்சள் பால் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டிருப்பதால்.மார்பகம், சருமம் , நுரையீரல்,புரோஸ்டேட் ,மற்றும் பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
3. தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? மஞ்சள் பால் குடித்து விட்டுப் படுங்கள். பிறகென்ன ஆனந்தமாக தூங்கலாம்.
4.மஞ்சள் பால் மூட்டு வலிக்கும் மிகப்பெரிய மருந்தாகிறது.வலியைக் குறைத்து நெகிழ்தண்மையுள்ள தசைகள் உருவாக உதவுகிறது.
5.ரத்தத்தையும் சுத்தப்படுத்துமாம் இது.
6. நல்ல ஆரோக்கியமான எலும்பைக் கொடுப்பதோடு , எலும்புத் தேய்மானமும் வராமல் தடுக்கும்.
7.செரிமானத்திற்கு உதவுவதோடு , அஜீரணம், வயிற்றுப் புண்,வயிற்றுப் போக்கு எல்லாவற்றிற்கும் சரியான மருந்து மஞ்சள் பால்.
8. மஞ்சள் பாலை ரெகுலராக குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலி. பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் விரைவில் நலம் பெறவும், கருப்பை சுருங்கதலும் விரைந்து நடக்க உதவும்..
9. சருமத்தில் சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு, மஞ்சள் பாலில் தோய்த்த பஞ்சை வைத்து ஒத்தி எடுத்து வந்தால் சில நாட்களில் .ஆறிவிடும்.
10. மிக முக்கியமான செய்தி. மஞ்சள் பாலைத் தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்பின் அளவு குறைந்து எடைக் குறைப்பிற்கு பேருதவியாக இருக்கிறது.
இப்படி அருமையான சக்தியை உள்ளடக்கிய பொன்னான மஞ்சள் பாலை அருந்தி ஆரோக்கியம் பெறுவோமா?
images courtesy---google.
மங்களகரமா ஆரம்பிச்சிருக்கீங்க. அமோகமா வளரட்டும் வலைப்பதிவு !!
ReplyDeleteநன்றி சித்ரா , தேடிக் கண்டுபிடித்து வந்து, வாழ்த்தி ஊக்கப் படுத்துவதற்கு.
Deleteமங்களகரமான ஆரம்பம். தங்கள் இந்த அஞ்சறைப்பெட்டியை இன்று தான் அகஸ்மாத்தாகப் பார்க்க நேர்ந்தது. மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துகள்.
ReplyDelete