கொத்தமல்லி , சீசனில் சீப்பாக கிடைக்கும்போது தொக்கு செய்து வைத்துக் கொண்டால் , பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
தொக்கு செய்யத் தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி ஒரு சின்ன கட்டு.
உளுத்தம்பருப்பு ஒரு கைப்பிடியளவு.
சிவப்பு மிளகாய் உங்கள் ருசிக்கேற்ப
புளி ஒரு சின்ன ஆரஞ்சு சைஸ் அளவு .
உப்புத் தேவையான அளவு.
பெருங்காயம் சிறிது.
எண்ணெய் ஒரு டீ ஸ்பூன் .
கொத்தமல்லியை தண்ணீரில் நன்கு கிளீன் செய்து, நறுக்கி வைத்துக் கொள்ளவும் .
வாணலியில் எண்ணெய் சூடான பின் , பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மிளகாயையும் வறுக்கவும்
உப்பு, பெருங்காயம், வறுத்த உளுத்தம்பருப்பு , மிளகாய் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்கு பொடியாக்கவும்.
ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். லேசாக "நறநற" என்று இருக்கும் போது ,புளியை, மிக்சியில் போட்டு சுற்றவும். நன்கு கலந்து வந்ததும் , நறுக்கி வைத்த கொத்தமல்லியையும் ,போட்டு இரண்டு மூன்று சுற்று சுற்றவும்.
நாம் உளுத்தம்பருப்பு வறுத்து சேர்ப்பது ரொம்பவும் "பிசுக் 'என்று ஒட்டாமல் இருப்பதற்காகத் தான்.
எடுத்து கண்ணாடி பாட்டிலிலோ அல்லது எவர் சில்வர் டப்பாவிலோ வைத்துக் கொள்ளுங்கள். மாசக் கணக்கிலிருக்கும். விருப்பப்பட்டால்
ஃ பிரிட்ஜிலும் வைத்து உபயோகிக்கலாம்.
தயவு செய்து பிளாஸ்டிக் பாட்டிலிலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ வைக்க வேண்டாமே!
ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை !
செய்து பார்த்து சொல்லுங்களேன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்