Tuesday, April 29, 2014

காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி  செய்யத் தெரியுமா ?
இதோ   ரெசிபி

தேவையானவை :

ஊற  வைத்து அரைக்க
  1. இட்லி அரிசி (பு. அரிசி) --- 1 கப் 
  2. பச்சை  அரிசி ------  1/2  கப் 
  3. உளுத்தம் பருப்பு -----1 கப் 
  4. வெந்தயம்  -----1/2 ஸ்பூன் 
மாவில் போடுவதற்கு
  1. மிளகு ----1 ஸ்பூன்.
  2. சீரகம் ----1 ஸ்பூன் 
  3. கடுகு -----1 ஸ்பூன் 
  4. உளுத்தம் பருப்பு  ----1 ஸ்பூன் 
  5. கடலை  பருப்பு---------1 ஸ்பூன் \
  6. முந்திரி  சிறிது.
  7. நல்லெண்ணெய்  1 ஸ்பூன் 
  8. நெய் சிறிது.
  9. கருவேப்பிலை  சிறிது.
  10. கொத்தமல்லி-- சிறிது.
  11. இஞ்சி சிறு துண்டு( நறுக்கியது)
  12. ஆப்ப சோடா  ஒரு சிட்டிகை.(விருப்பப்பட்டால்)
  13. மிளகு பொடி சிறிது 
  14. உப்பு  தேவைக்கேற்ப 




செய்முறை 



 4 அல்லது 5 மணி நேரம் அரிசி(இரண்டு அரசியையும்), உ .பருப்பையும்  தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறின அரிசியை  சற்றே கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ளவும். ரொம்பவும் கொரகொரப்பாகவும்  இருக்க வேண்டம், ரொம்பவும் நைசாகவும் அரைக்க வேண்டாம். அரிசி உப்புமாவிற்கு அரிசி உடைபடும்  அளவில் இருந்தால் போதும்.உளுத்தம்பருப்பை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.( சிலர் அரிசி பருப்பு எல்லாம் ஒன்றாகப் போட்டும் அரைப்பார்கள்.  நான் தனியாகத் தான் அரைத்து செய்தேன். ஆப்பசோடா ஒரு சிட்டிகை போடுவதால் தவறில்லை)  அரிசி மாவு, உளுத்தமாவு இரண்டையும் உப்புப் போட்டு  நன்கு கலந்து வைக்கவும். எட்டு மணி நேரம்  ஆன பின்பு, கடாயில் எண்ணெய்  ஊற்றி, சூடான பின்பு ,கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம்,  போட்டு சிவக்க வறுக்கவும். பின்பு அதிலேயே  கறிவேப்பிலை, இஞ்சிப் போட்டு  தாளித்து, மாவில் கொட்டவும். முந்திரியையும் நெய்யில் வறுத்து மாவில் போடவும். மறக்காமல் மிளகுத் தூளை சேர்க்கவும். சுக்கும் தூள் செய்து  சேர்த்துக் கொள்ளலாம். நான் இஞ்சி மட்டுமே சேர்த்தேன்.

பிறகு,இட்லி தட்டிலோ, அல்லது சின்ன சின்ன கப்பிலோ  ஊற்றி  வேக வைக்கவும்.
தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும்.






சாப்பிட்ட பின் உங்கள் கருத்துக்களை  என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.


Saturday, April 12, 2014

பூண்டு மிளகாய் துவையல்

இட்லி, தோசை, இவற்றிற்கு  பூண்டு  மிளகாய் துவையலை தொட்டுக் கொள்ளலாம்.  இட்லி, தோசையின் சுவையைக் கூட்டுவதோடு, மட்டுமல்லாமல்  இதயத்திற்கும் நல்லது செய்யும் .

தேவையான பொருட்கள்.

  • பூண்டு  உரித்தது கைப்பிடியளவு.
  • சிவப்பு  மிளகாய்- உங்கள் தேவைக்கேற்ப.
  • புளி--ஒரு கொட்டைப் பாக்களவு.
  • உப்பு- ருசிக்கேற்ப
  • எண்ணெய்- அரை  டீஸ்பூன்




செய்முறை  :

முதலில் வாணலியில் என்னெய்  விட்டு சூடானவுடன், மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். எடுத்துக் கொண்டிருக்கும் மிளகாயின் அளவு  பூண்டின் அளவை விடவும் அதிகமாக இருப்பது நல்லது.அப்பொழுது தான் ' பிசுக் ' என்று ஒட்டாமல் இருக்கும்.மிளகாய் வறுத்ததும் ,எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் அடுப்பை அணைத்து விடவும். சூடாக இருக்கும் வாணலியில்  பூண்டைப் போட்டு மிக லேசாக வதக்கவும்.

மிக்சியில் முதலில் வறுத்த மிளகாய், உப்புப் போட்டு  பொடித்துக் கொள்ளவும். நன்கு பொடியானதும் புளி , போட்டு இரண்டு சுத்து சுத்தவும். அதோடு லேசாக வதக்கின பூண்டைப் போட்டு  நைசாக அரைக்கவும்.

அரைத்ததை ,எவர்சில்வர்  டப்பாவிலோ, கண்ணாடி பாட்டிலிலோ எடுத்து வைத்துக் கொள்ளவும். நீண்ட நாட்கள் இருக்கும் . தண்ணீர் சேர்க்காததினால் கெட்டு விடும் அபாயமில்லை. வேண்டுமென்றால், பிரிட்ஜிலும் வைத்துக் கொள்ளலாம்.





இட்லி, தோசையுடன், தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் அனுபவங்களை எனக்கு சொல்லுங்கள்.