Tuesday, April 29, 2014

காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி  செய்யத் தெரியுமா ?
இதோ   ரெசிபி

தேவையானவை :

ஊற  வைத்து அரைக்க
  1. இட்லி அரிசி (பு. அரிசி) --- 1 கப் 
  2. பச்சை  அரிசி ------  1/2  கப் 
  3. உளுத்தம் பருப்பு -----1 கப் 
  4. வெந்தயம்  -----1/2 ஸ்பூன் 
மாவில் போடுவதற்கு
  1. மிளகு ----1 ஸ்பூன்.
  2. சீரகம் ----1 ஸ்பூன் 
  3. கடுகு -----1 ஸ்பூன் 
  4. உளுத்தம் பருப்பு  ----1 ஸ்பூன் 
  5. கடலை  பருப்பு---------1 ஸ்பூன் \
  6. முந்திரி  சிறிது.
  7. நல்லெண்ணெய்  1 ஸ்பூன் 
  8. நெய் சிறிது.
  9. கருவேப்பிலை  சிறிது.
  10. கொத்தமல்லி-- சிறிது.
  11. இஞ்சி சிறு துண்டு( நறுக்கியது)
  12. ஆப்ப சோடா  ஒரு சிட்டிகை.(விருப்பப்பட்டால்)
  13. மிளகு பொடி சிறிது 
  14. உப்பு  தேவைக்கேற்ப 




செய்முறை 



 4 அல்லது 5 மணி நேரம் அரிசி(இரண்டு அரசியையும்), உ .பருப்பையும்  தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறின அரிசியை  சற்றே கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ளவும். ரொம்பவும் கொரகொரப்பாகவும்  இருக்க வேண்டம், ரொம்பவும் நைசாகவும் அரைக்க வேண்டாம். அரிசி உப்புமாவிற்கு அரிசி உடைபடும்  அளவில் இருந்தால் போதும்.உளுத்தம்பருப்பை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.( சிலர் அரிசி பருப்பு எல்லாம் ஒன்றாகப் போட்டும் அரைப்பார்கள்.  நான் தனியாகத் தான் அரைத்து செய்தேன். ஆப்பசோடா ஒரு சிட்டிகை போடுவதால் தவறில்லை)  அரிசி மாவு, உளுத்தமாவு இரண்டையும் உப்புப் போட்டு  நன்கு கலந்து வைக்கவும். எட்டு மணி நேரம்  ஆன பின்பு, கடாயில் எண்ணெய்  ஊற்றி, சூடான பின்பு ,கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம்,  போட்டு சிவக்க வறுக்கவும். பின்பு அதிலேயே  கறிவேப்பிலை, இஞ்சிப் போட்டு  தாளித்து, மாவில் கொட்டவும். முந்திரியையும் நெய்யில் வறுத்து மாவில் போடவும். மறக்காமல் மிளகுத் தூளை சேர்க்கவும். சுக்கும் தூள் செய்து  சேர்த்துக் கொள்ளலாம். நான் இஞ்சி மட்டுமே சேர்த்தேன்.

பிறகு,இட்லி தட்டிலோ, அல்லது சின்ன சின்ன கப்பிலோ  ஊற்றி  வேக வைக்கவும்.
தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும்.






சாப்பிட்ட பின் உங்கள் கருத்துக்களை  என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.


5 comments:

  1. நல்ல தகவல். நான் காஞ்சீபுரம் இட்லி செய்வதை மக்கள் டிவியில் காட்டும்போது பார்த்திருக்கிறேன். குடைலை இட்லி என்று அழைக்கிறார்கள். நாங்கள் ரெடிமேட் ரவா இட்லி வாங்கி அவ்வப்போது செய்வதுண்டு!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. 2 சாதாரண இட்லி, 2 கப் இட்லியா ! பார்க்கவே சூப்பரா இருக்குங்க.

    நீங்க சொல்லியுள்ள காஞ்சிபுரம் இட்லியை நாங்க 'தாளித்த இட்லி'ன்னு சொல்லுவோம். ஒன்றரை கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்தாஆஆ ! உளுந்து அளவுதான் என்னை எதையும் செய்ய விடாமல் தடுக்கிறது.

    முன்பெல்லாம் (அப்பா இருந்த‌வரை) தினமும் இட்லிமாவு அரைப்போம். என்றைக்காவது மாவு கொஞ்சம் மீதமானால் மாலை நேரத்தில் இதே மாதிரிதான் தாளித்து 'தாளித்த இட்லி' செய்வாங்க எங்கம்மா. தொட்டு சாப்பிடக்கூட எதுவும் வேண்டாம், அப்படியே சாப்பிடலாம், அவ்வளவு சுவையாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பயப்படாமல் செய்து பாருங்கள். உளுத்தம் பருப்பை பூ'க்க பூக்க அரைக்க வேண்டியதில்லை. எல்லவற்றையும் நான் மிக்சியில் அரைத்துத் தான் செய்தேன். என் அரிசி மாவு இன்னுமே கொரகொர என்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
      திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இது பிரசாதமாகவே கிடைக்கும்.
      செய்து பார்த்து எனக்கு எப்படி வந்தது என்று சொல்லுங்கள் தெரிந்து கொள்ள ஆவல்./

      Delete
  3. காஞ்சிபுரம் சென்றபோதெல்லாம் ஹோட்டல்களில் இதை சாப்பிட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்