இட்லி, தோசை, இவற்றிற்கு பூண்டு மிளகாய் துவையலை தொட்டுக் கொள்ளலாம். இட்லி, தோசையின் சுவையைக் கூட்டுவதோடு, மட்டுமல்லாமல் இதயத்திற்கும் நல்லது செய்யும் .
தேவையான பொருட்கள்.
முதலில் வாணலியில் என்னெய் விட்டு சூடானவுடன், மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். எடுத்துக் கொண்டிருக்கும் மிளகாயின் அளவு பூண்டின் அளவை விடவும் அதிகமாக இருப்பது நல்லது.அப்பொழுது தான் ' பிசுக் ' என்று ஒட்டாமல் இருக்கும்.மிளகாய் வறுத்ததும் ,எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் அடுப்பை அணைத்து விடவும். சூடாக இருக்கும் வாணலியில் பூண்டைப் போட்டு மிக லேசாக வதக்கவும்.
மிக்சியில் முதலில் வறுத்த மிளகாய், உப்புப் போட்டு பொடித்துக் கொள்ளவும். நன்கு பொடியானதும் புளி , போட்டு இரண்டு சுத்து சுத்தவும். அதோடு லேசாக வதக்கின பூண்டைப் போட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்ததை ,எவர்சில்வர் டப்பாவிலோ, கண்ணாடி பாட்டிலிலோ எடுத்து வைத்துக் கொள்ளவும். நீண்ட நாட்கள் இருக்கும் . தண்ணீர் சேர்க்காததினால் கெட்டு விடும் அபாயமில்லை. வேண்டுமென்றால், பிரிட்ஜிலும் வைத்துக் கொள்ளலாம்.
இட்லி, தோசையுடன், தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் அனுபவங்களை எனக்கு சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்.
- பூண்டு உரித்தது கைப்பிடியளவு.
- சிவப்பு மிளகாய்- உங்கள் தேவைக்கேற்ப.
- புளி--ஒரு கொட்டைப் பாக்களவு.
- உப்பு- ருசிக்கேற்ப
- எண்ணெய்- அரை டீஸ்பூன்
செய்முறை :
முதலில் வாணலியில் என்னெய் விட்டு சூடானவுடன், மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். எடுத்துக் கொண்டிருக்கும் மிளகாயின் அளவு பூண்டின் அளவை விடவும் அதிகமாக இருப்பது நல்லது.அப்பொழுது தான் ' பிசுக் ' என்று ஒட்டாமல் இருக்கும்.மிளகாய் வறுத்ததும் ,எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் அடுப்பை அணைத்து விடவும். சூடாக இருக்கும் வாணலியில் பூண்டைப் போட்டு மிக லேசாக வதக்கவும்.
மிக்சியில் முதலில் வறுத்த மிளகாய், உப்புப் போட்டு பொடித்துக் கொள்ளவும். நன்கு பொடியானதும் புளி , போட்டு இரண்டு சுத்து சுத்தவும். அதோடு லேசாக வதக்கின பூண்டைப் போட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்ததை ,எவர்சில்வர் டப்பாவிலோ, கண்ணாடி பாட்டிலிலோ எடுத்து வைத்துக் கொள்ளவும். நீண்ட நாட்கள் இருக்கும் . தண்ணீர் சேர்க்காததினால் கெட்டு விடும் அபாயமில்லை. வேண்டுமென்றால், பிரிட்ஜிலும் வைத்துக் கொள்ளலாம்.
இட்லி, தோசையுடன், தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் அனுபவங்களை எனக்கு சொல்லுங்கள்.
பூண்டு மிளகாய் துவையல் படிக்கும் போதே நல்ல விறுவிறுப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete