Tuesday, January 7, 2014

தக்காளி தோசை.



நான்  நெட்டில் உலா வரும் போது  திருமதி  கீதா  சாம்பசிவம் அவர்களின்  இந்த தோசைக் குறிப்பை படிக்க நேர்ந்தது. சிற்சில மாற்றங்களுடன்  முயற்சித்துப் பார்க்கலாமே  என்று  தோன்ற  மறு நாளே செய்தேன். நன்றாகவே வந்தது.

அதை  இங்கே  உங்களுடன் பகிர்கிறேன்.

தேவையானவை ;

பச்சரிசி  ----1 கப்

இட்லி அரிசி(புழுங்கலரிசி)--1 கப்.

உளுத்தம் பருப்பு --அரை கப்.

துவரம் பருப்பு -----அரை கப்.

தக்காளி------மூன்று அல்லது நான்கு.

பச்சை மிளகாய் -----3

இஞ்சி  ஒரு சின்ன துண்டு.

உப்பு ருசிக்கேற்ப

எண்ணெய் ---- தோசை வார்ப்பதற்கு.

அரிசி பருப்பு வகைகளை  சுமார் நான்கு மணி நேரம் ஊற  வைத்து  மிக்சியிலோ. கிரைண்டரிலோ   அரைக்கவும். பாதி அரைபடும் பொது , இஞ்சி, மிளகாய்,  தக்காளி( தோல் நீக்கியோ, நீக்காமலோ).  தக்காளி தோல் நீக்க ,தக்காளியை ஒரு சில நிமிடங்கள் வெந்நீரில் போட்டு வைத்து , பின்பு உரித்தால் தோல் உரிந்து வந்து விடும் .நான் அப்படியே போட்டு அரைத்தேன். பல்லில் தக்காளித் தோல் அகப்படுமோ என்று நினைத்தேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  நம் சிறுநீரகங்களுக்கும்  நல்லது ஆச்சு .  நல்ல நைசாக அரைத்த பின்பு  , உப்புப் போட்டு ,கலந்து விட்டு உடனேயே தோசையாக  வார்த்து விடுங்கள்.  அருமையாக இருக்கும்.

நான்-ஸ்டிக்(Non-Stick)  தோசைக்கல் வேண்டாமே!
 நம் பழைய இரும்புத் தோசைக் கல்லிலேயே   தோசை  ஊற்றி  குடும்பத்தினரின் ஆரோக்கியம்  காப்போம்.

இந்தத்  தோசை செய்வதற்கு  தூண்டுகோலாய்  அமைந்த  திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் நன்றி.

பட  உதவி---கூகுல் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்